Friday 2 March 2012

யோகா யோகா யோகா


யோகா

யோகாவின் குரு பதஞ்சலி முனிவர். இவர் எழுதியுள்ள யோக சூத்திரங்கள் யோக கலைகளை விவரிக்கின்றன. யோகா மட்டுமல்ல, பதஞ்சலி ஆயுர்வேதத்தின் தலைமை மருத்துவ நூலான சரகஸம்ஹிதைக்கும் ஒரு உரை எழுதியிருக்கிறார். இதிலிருந்தே யோகாவும், ஆயுர்வேதமும் எவ்வளவு ஒன்றிணைந்தவை என்பது புலப்படும். பதஞ்சலி முனிவர் தான் யோகக் கலைகளை தொகுத்து ‘யோக சூத்திரங்கள்’ என்று வடிவமைத்தவர்.
யோகா என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வுலகில் மதங்கள் தோன்றுவதற்கு முன்னர் தோன்றியது. எனவே இதனை எல்லா மதத்தினரும் செய்யலாம். இவ்வுலகில் உள்ள அனைத்து மனிதர்களும் ஆரோக்கியமாகவும், நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருப்பதற்காகவே தோன்றியது தான் இந்த யோகக்கலை.

No comments:

Post a Comment