Saturday 3 March 2012

பத்மாசனம்


பத்மாசனம்

‘பத்மம்’ என்றால் தாமரை. இதை செய்யும் போது தாமரை மலர் போல் தோன்றுவதால் இந்தப் பெயர். தியானம் செய்வதற்கு ஏற்ற ஆசனம். இதை ஆசனம் என்று சொல்வதை விட, யோக முத்திரை என்று சொல்லலாம்.
செய்முறை
1. தரை / தரை விரிப்பின் மேல் உட்காரவும். கால்களை நீட்டிக் கொள்ளவும்.
2. முதுகை நிமிர்த்தி நேராக வைக்கவும். கைகளை உடலின் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும். நார்மலாக சுவாசிக்கவும்.
3. வலது காலை தூக்கி இடது தொடையில் வைக்கவும். அதே போல இடது காலை மடித்து தூக்கி வலது தொடையில் வைக்கவும்.
4. இரண்டு குதிகால்களும் அடிவயிற்றை தொட்டுக் கொண்டு இருக்க வேண்டும்.
5. இடது கையை நீட்டி வலது கால் முட்டியின் மீது வைக்கவும். வலது கையை வலது கால் முட்டியில் வைக்கவும்.
6. கை விரல்கள் யோக முத்திரைகளில் ஒன்றான “ஞான (சின்) முத்திரை”யில் வைத்துக் கொள்ளவும். அதாவது ஆள்காட்டி விரல் கட்டை விரலை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். இதர விரல்கள் தரையை நோக்கியிருக்கும். நார்மலாக சுவாசிக்கவும்.
7. ஆரம்பத்தில் இந்த நிலையில் 1 லிருந்து 3 நிமிடங்கள் இருக்கலாம். பிறகு நேரத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.
8. இந்த நிலையும் தியானமும் பிராணாயாமமும் செய்யலாம்.
9. கண்களை மூடி அமைதியாக வைத்துக் கொள்ளவும்.
10. கண்களை திறந்து, கை விரல்களை தளர்த்தி ஒவ்வொரு காலாக தூக்கி தரையில் வைத்து நார்மல் நிலைக்கு திரும்பவும்.
பலன்கள்
1. ஜபம், தியானம், பிராணாயமம் செய்ய உகந்த ஆசனம்.
2. ருமாடிக் வலிகளை குறைக்கும். விறைத்து விடும் கால்கள், முழங்கால்களில் ரத்த ஒட்டத்தை அதிகப்படுத்தி சரிசெய்யும்.
3. அடிவயிற்று பிரதேசத்துக்கு ரத்த ஒட்டத்தை அதிகரிக்கும்.
4. நரம்புகளுக்கு நல்லது.
5. மனோசக்தி கூடுகிறது.
எச்சரிக்கை
1. பத்மாசனம் செய்யும் போது குனியக்கூடாது.
2. தொடக்கத்தில் முழங்கால் வலி ஏற்படலாம். பழகப் பழக சரியாகி விடும். ஆனால் வலி வந்தால் ஆசனத்தை நிறுத்தி, இளைப்பாறவும்.
பத்மாசனம், தியானம், ஆசனம், யோக, முத்திரை, கால்களை, முதுகை, உடலின்,
அடி, வயிற்றை, ஞான, முத்திரை, தியானமும், பிராணாயாமமும், கண்கள்
ருமாடிக், வலிகளை, ரத்த, ஒட்டத்தை, அடி, வயிற்று, ரத்த, ஒட்டத்தை,
நரம்புகளுக்கு, மனோ, சக்தி, பத்மாசனம், முழங்கால், வலி, ஆசனத்தை,
பத்மாசனம்’பத்மம்’ என்றால் தாமரை. இதை செய்யும் போது தாமரை மலர் போல் தோன்றுவதால் இந்தப் பெயர். தியானம் செய்வதற்கு ஏற்ற ஆசனம். இதை ஆசனம் என்று சொல்வதை விட, யோக முத்திரை என்று சொல்லலாம்.
செய்முறை
1. தரை / தரை விரிப்பின் மேல் உட்காரவும். கால்களை நீட்டிக் கொள்ளவும்.
2. முதுகை நிமிர்த்தி நேராக வைக்கவும். கைகளை உடலின் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும். நார்மலாக சுவாசிக்கவும்.
3. வலது காலை தூக்கி இடது தொடையில் வைக்கவும். அதே போல இடது காலை மடித்து தூக்கி வலது தொடையில் வைக்கவும்.
4. இரண்டு குதிகால்களும் அடிவயிற்றை தொட்டுக் கொண்டு இருக்க வேண்டும்.
5. இடது கையை நீட்டி வலது கால் முட்டியின் மீது வைக்கவும். வலது கையை வலது கால் முட்டியில் வைக்கவும்.
6. கை விரல்கள் யோக முத்திரைகளில் ஒன்றான “ஞான (சின்) முத்திரை”யில் வைத்துக் கொள்ளவும். அதாவது ஆள்காட்டி விரல் கட்டை விரலை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். இதர விரல்கள் தரையை நோக்கியிருக்கும். நார்மலாக சுவாசிக்கவும்.
7. ஆரம்பத்தில் இந்த நிலையில் 1 லிருந்து 3 நிமிடங்கள் இருக்கலாம். பிறகு நேரத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.
8. இந்த நிலையும் தியானமும் பிராணாயாமமும் செய்யலாம்.
9. கண்களை மூடி அமைதியாக வைத்துக் கொள்ளவும்.
10. கண்களை திறந்து, கை விரல்களை தளர்த்தி ஒவ்வொரு காலாக தூக்கி தரையில் வைத்து நார்மல் நிலைக்கு திரும்பவும்.
பலன்கள்
1. ஜபம், தியானம், பிராணாயமம் செய்ய உகந்த ஆசனம்.
2. ருமாடிக் வலிகளை குறைக்கும். விறைத்து விடும் கால்கள், முழங்கால்களில் ரத்த ஒட்டத்தை அதிகப்படுத்தி சரிசெய்யும்.
3. அடிவயிற்று பிரதேசத்துக்கு ரத்த ஒட்டத்தை அதிகரிக்கும்.
4. நரம்புகளுக்கு நல்லது.
5. மனோசக்தி கூடுகிறது.
எச்சரிக்கை
1. பத்மாசனம் செய்யும் போது குனியக்கூடாது.
2. தொடக்கத்தில் முழங்கால் வலி ஏற்படலாம். பழகப் பழக சரியாகி விடும். ஆனால் வலி வந்தால் ஆசனத்தை நிறுத்தி, இளைப்பாறவும்.

No comments:

Post a Comment