Friday 2 March 2012

விபரீத கரணி


விபரீத கரணி


‘விபரீத’ என்றால் தலைகீழாக திருப்பப்பட்ட என்று பொருள். கரணி என்றால் செயல். இந்த ஆசனத்தில் கால்களை தலைக்கு மேல் உயர்த்தி வைப்பதால், விபரீத கரணி என்ற பெயர் ஏற்பட்டது. ஹதயோக தீபிகாவில் இந்த ஆசனம் ஒரு யோக முத்திரையாகவே சொல்லப்படுகிறது. இந்த ஆசனத்தை பழகினால், மற்றொரு சிறந்த ஆசனமான சர்வாங்காசனத்தை செய்வது சுலபமாகும்.
செய்முறை
1. ஒரு சுவரின் அருகே, கால்கள் சுவற்றை தொடும் படி, மல்லாந்து படுக்கவும். கைகளை பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும். உள்ளங்கைகள் மேல்நோக்கி இருக்கட்டும்.
2. கால்களை மடக்கி மார்பருகே கொண்டு வரவும்.
3. கால்களை மேலும் தூக்கி சுவர் மேல் வைக்கவும். பாதங்கள் சுவர் மேல் பட வேண்டும்.
4. உடலை (பிட்டம்) சுவர் அருகே நகர்த்தி இரு கால்களை முடிந்த மட்டும் மேலே தூக்கவும். முதுகு தரையை தொட்டுக் கொண்டிருக்கட்டும். இரு கால்களும் சுவற்றின் மேல் ஊன்றியிருக்கும்.
5. கைகளை தலைக்கு மேல், தரையில் படுக்க வைத்துக் கொள்ளலாம்.
6. நார்மலாக மூச்சு விடவும். இந்த நிலையில் சில நொடிகள் இருக்கவும்.
7. நார்மல் நிலைக்கு திரும்பவும்.
பலன்கள்
1. உடல் எடையை கட்டுப்படுத்தும்.
2. உடல் ரத்த ஒட்டத்தை அதிகரிக்கிறது.
3. கால்களை பலப்படுத்தும்.
4. பாலியல் குறைபாடுகளை போக்க உதவும்.
எச்சரிக்கை
1. க்ளைகோமா (நிறீணீuநீஷீனீணீ) என்ற பார்வை கோளாறு உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.
2. பெண்கள் மாதவிடாயின் போது செய்யக் கூடாது.
3. வெறும் வயிற்றில் (அ) உணவு உண்டபின் 2 மணி நேரம் கழித்து தான் இந்த ஆசனத்தை செய்ய வேண்டும்.
விபரீத, கரணி,
ஹதயோகம், ஆசனம், சர்வாங்காசனம், மார்பருகே, உடலை, உடல், உடல், ரத்த, ஒட்டத்தை, பாலியல், குறைபாடுகளை, க்ளைகோமா, பார்வை, கோளாறு, ஆசனத்தை, பெண்கள், மாதவிடாயின், வயிற்றில், உணவு,
விபரீத கரணி’விபரீத’ என்றால் தலைகீழாக திருப்பப்பட்ட என்று பொருள். கரணி என்றால் செயல். இந்த ஆசனத்தில் கால்களை தலைக்கு மேல் உயர்த்தி வைப்பதால், விபரீத கரணி என்ற பெயர் ஏற்பட்டது. ஹதயோக தீபிகாவில் இந்த ஆசனம் ஒரு யோக முத்திரையாகவே சொல்லப்படுகிறது. இந்த ஆசனத்தை பழகினால், மற்றொரு சிறந்த ஆசனமான சர்வாங்காசனத்தை செய்வது சுலபமாகும். செய்முறை
1. ஒரு சுவரின் அருகே, கால்கள் சுவற்றை தொடும் படி, மல்லாந்து படுக்கவும். கைகளை பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும். உள்ளங்கைகள் மேல்நோக்கி இருக்கட்டும்.
2. கால்களை மடக்கி மார்பருகே கொண்டு வரவும்.
3. கால்களை மேலும் தூக்கி சுவர் மேல் வைக்கவும். பாதங்கள் சுவர் மேல் பட வேண்டும்.
4. உடலை (பிட்டம்) சுவர் அருகே நகர்த்தி இரு கால்களை முடிந்த மட்டும் மேலே தூக்கவும். முதுகு தரையை தொட்டுக் கொண்டிருக்கட்டும். இரு கால்களும் சுவற்றின் மேல் ஊன்றியிருக்கும்.
5. கைகளை தலைக்கு மேல், தரையில் படுக்க வைத்துக் கொள்ளலாம்.
6. நார்மலாக மூச்சு விடவும். இந்த நிலையில் சில நொடிகள் இருக்கவும்.
7. நார்மல் நிலைக்கு திரும்பவும்.
பலன்கள்
1. உடல் எடையை கட்டுப்படுத்தும்.
2. உடல் ரத்த ஒட்டத்தை அதிகரிக்கிறது.
3. கால்களை பலப்படுத்தும்.
4. பாலியல் குறைபாடுகளை போக்க உதவும்.
எச்சரிக்கை
1. க்ளைகோமா (நிறீணீuநீஷீனீணீ) என்ற பார்வை கோளாறு உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.
2. பெண்கள் மாதவிடாயின் போது செய்யக் கூடாது.
3. வெறும் வயிற்றில் (அ) உணவு உண்டபின் 2 மணி நேரம் கழித்து தான் இந்த ஆசனத்தை செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment