Friday 2 March 2012

சவாசனம்


சவாசனம்


யோகாசனங்களில் முக்கியமானது சவாசனம். ஆசனங்களைப் பற்றிய பல பழைய நூல்களில் விடாமல் குறிப்பிடப்படுவது சவாசனம்.
பெயருக்கேற்றபடி “சவம்” போல் படுத்து  செய்யப்படுவது இந்த ஆசனம். கேட்க, பார்க்க சுலபமாக தோன்றினாலும் செய்ய கடுமையானது. மற்ற ஆசனங்கள் படி, இதை குருவிடம் கற்றுக் கொள்ள வேண்டும். உங்களுக்கு வழிகாட்டியாக இதை செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
முதலில் கால்களை நீட்டி நேராக படுத்து கொள்ளவும். கண்களை மூடவும். சமமட்டமாக படுக்க வேண்டும். தலையை வலது புறமோ, இடது புறமோ திருப்பாமல் நேராக வைத்துக் கொள்ளவும். உடல், தசைகளை தளரவிடுங்கள். எந்த விதமான அசைவும் கூடாது. கால்களை அகற்றி படுக்கவும்.
அசைவில்லாமல் நன்றாக மூச்சை இழுத்து வெளியே, சீராக விடவும். பிறகு சாதாரணமான வழக்கம் போல் மூச்சை சரியாக இயங்க விடவும்.
இப்பொழுது உடலின் ஒவ்வொரு பாகத்தையும் நினைவு கூறவும். உதாரணமாக கால் கட்டை விரலிலிருந்து ஆரம்பிக்கவும். கால் கட்டை விரலை மனதில் உருவகமாக்கி, மனதால் “என் கால் கட்டை விரலே, ஒய்வு கொள்ளவும் – என் கால்கட்டை விரல்கள் ஒய்வு எடுக்கின்றன” என்று சொல்லிக் கொள்ளவும்.
இவ்வாறு ஆரம்பித்து, பாதம், கால் ஆடு தசைகள், முழங்கால்கள், தொடைகள், பிறப்புறுப்புகள், பின்பாகம், இடுப்பு, அடி வயிறு, கீழ் முதுகு, மேல் முதுகு, தோல், விரல்கள், உள்ளங்கைகள், முழங்கைகள், கைகள், தோள்கள், கழுத்து, தாடை, கன்னங்கள், உதடுகள், நாக்கு, மூக்கு, கண்கள், இமைகள், நெற்றி இத்யாதி உறுப்புகளை படிப்படியாக தியானித்து ஒய்வு எடுக்கச் செய்யவும்.
பிறகு உடலின் உள்பாகங்களை மூளை, இதயம், நுரையீரல், வயிறு, சிறுநீரகம், சுரப்பிகள், நரம்புகள், திசுக்கள் இவைகளையும் ஒய்வெடுக்கச் செய்யவும். பிறகு மனது, உடல் முழுவதையும் ஒய்வெடுக்க வைக்கவும் ‘ரிலாக்ஸாக’ (ஸிமீறீணீஜ்) இன்னும் ஐந்து நிமிடங்கள் அமைதியாகபடுத்திருக்கவும். தூங்கிவிடக்கூடாது.
எழுந்திருக்கும் போது உடலை சிறிது அசைத்து இடது பக்கம் உடலைத் திருப்பி, பக்கவாட்டில் எழுவது நலம்.
மற்ற பயிற்சிகளையெல்லாம் செய்து முடித்த பின் இதை செய்யலாம். புத்துணர்ச்சி திரும்பும்.
மறுபடியும் சொல்கிறோம். குருவிடம் பயின்ற பின்பே இந்த ஆசனத்தை செய்ய வேண்டும்.
பலன்கள்
1. “டென்ஷன்”, “ஸ்ட்ரெஸ்” இவை குறையும். தசை இறுக்கங்களை குறைக்கும்.
2. இதயத்திற்கு நல்லது.
3. மனம் சாந்தி அடையும்.
4. நரம்புகளை சமனப்படுத்தும்.
சவாசனம் குரு, கண்களை, தலையை, உடல், தசைகளை, கால்களை, மூச்சை, உடலின், கால், கட்டை, விரலிலிருந்து, பாதம், கால், ஆடு, தசைகள், முழங்கால்கள், தொடைகள், பிறப்புறுப்புகள், இடுப்பு, அடி, வயிறு, கீழ், முதுகு, மேல், முதுகு, தோல், விரல்கள், உள்ளங்கைகள், முழங்கைகள், கைகள், தோள்கள், கழுத்து, தாடை, கன்னங்கள், உதடுகள், நாக்கு, மூக்கு, கண்கள், இமைகள், நெற்றி, இத்யாதி, உறுப்புகளை, உடலின், மூளை, இதயம், நுரையீரல், வயிறு, சிறுநீரகம், சுரப்பிகள், நரம்புகள், திசுக்கள், மனது, உடல் டென்ஷன், ஸ்ட்ரெஸ், இதயத்திற்கு, மனம், சாந்தி, நரம்புகளை,
சவாசனம்யோகாசனங்களில் முக்கியமானது சவாசனம். ஆசனங்களைப் பற்றிய பல பழைய நூல்களில் விடாமல் குறிப்பிடப்படுவது சவாசனம். பெயருக்கேற்றபடி “சவம்” போல் படுத்து  செய்யப்படுவது இந்த ஆசனம். கேட்க, பார்க்க சுலபமாக தோன்றினாலும் செய்ய கடுமையானது. மற்ற ஆசனங்கள் படி, இதை குருவிடம் கற்றுக் கொள்ள வேண்டும். உங்களுக்கு வழிகாட்டியாக இதை செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
முதலில் கால்களை நீட்டி நேராக படுத்து கொள்ளவும். கண்களை மூடவும். சமமட்டமாக படுக்க வேண்டும். தலையை வலது புறமோ, இடது புறமோ திருப்பாமல் நேராக வைத்துக் கொள்ளவும். உடல், தசைகளை தளரவிடுங்கள். எந்த விதமான அசைவும் கூடாது. கால்களை அகற்றி படுக்கவும்.
அசைவில்லாமல் நன்றாக மூச்சை இழுத்து வெளியே, சீராக விடவும். பிறகு சாதாரணமான வழக்கம் போல் மூச்சை சரியாக இயங்க விடவும்.
இப்பொழுது உடலின் ஒவ்வொரு பாகத்தையும் நினைவு கூறவும். உதாரணமாக கால் கட்டை விரலிலிருந்து ஆரம்பிக்கவும். கால் கட்டை விரலை மனதில் உருவகமாக்கி, மனதால் “என் கால் கட்டை விரலே, ஒய்வு கொள்ளவும் – என் கால்கட்டை விரல்கள் ஒய்வு எடுக்கின்றன” என்று சொல்லிக் கொள்ளவும்.
இவ்வாறு ஆரம்பித்து, பாதம், கால் ஆடு தசைகள், முழங்கால்கள், தொடைகள், பிறப்புறுப்புகள், பின்பாகம், இடுப்பு, அடி வயிறு, கீழ் முதுகு, மேல் முதுகு, தோல், விரல்கள், உள்ளங்கைகள், முழங்கைகள், கைகள், தோள்கள், கழுத்து, தாடை, கன்னங்கள், உதடுகள், நாக்கு, மூக்கு, கண்கள், இமைகள், நெற்றி இத்யாதி உறுப்புகளை படிப்படியாக தியானித்து ஒய்வு எடுக்கச் செய்யவும்.
பிறகு உடலின் உள்பாகங்களை மூளை, இதயம், நுரையீரல், வயிறு, சிறுநீரகம், சுரப்பிகள், நரம்புகள், திசுக்கள் இவைகளையும் ஒய்வெடுக்கச் செய்யவும். பிறகு மனது, உடல் முழுவதையும் ஒய்வெடுக்க வைக்கவும் ‘ரிலாக்ஸாக’ (ஸிமீறீணீஜ்) இன்னும் ஐந்து நிமிடங்கள் அமைதியாகபடுத்திருக்கவும். தூங்கிவிடக்கூடாது.
எழுந்திருக்கும் போது உடலை சிறிது அசைத்து இடது பக்கம் உடலைத் திருப்பி, பக்கவாட்டில் எழுவது நலம்.
மற்ற பயிற்சிகளையெல்லாம் செய்து முடித்த பின் இதை செய்யலாம். புத்துணர்ச்சி திரும்பும்.
மறுபடியும் சொல்கிறோம். குருவிடம் பயின்ற பின்பே இந்த ஆசனத்தை செய்ய வேண்டும்.
பலன்கள்
1. “டென்ஷன்”, “ஸ்ட்ரெஸ்” இவை குறையும். தசை இறுக்கங்களை குறைக்கும்.
2. இதயத்திற்கு நல்லது.
3. மனம் சாந்தி அடையும்.
4. நரம்புகளை சமனப்படுத்தும்.

No comments:

Post a Comment